×

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

சென்னை: தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மயிலாப்பூர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.தென்சென்னை நாடாளுமன்ற  அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 124வது வட்டத்தில் நேற்று காலை  பிரசாரம் செய்து  பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:அனைத்து ரயில் முனையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் மற்றும் ரயில் வழித்தடங்களில் சேதமடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்கவும், அம்முனையங்களை  மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்தியதன் மூலம் மத்திய அரசின் நிதி பெறப்பட்டு பல்வேறு கட்டங்களில் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இதேபோல், பிரதமருக்கு கடிதம் எழுதி, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ₹52 லட்சம் பெறப்பட்டு தொகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட  பலருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலியில் 100 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதேபோல், சோழிங்கநல்லூர் வருவாய்  தாலுகாவை சென்னை மாவட்டத்துடன் இணைக்க தொடர்ந்து முதலமைச்சரை வலியுறுத்தியதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சென்னை  வருவாய் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இவ்வாறு பேசினார். அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ, பா.ம.க மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் தர், தமாகா  கொட்டிவாக்கம் முருகன், புதிய நீதி கட்சி துரைராஜ், புரட்சி பாரதம் ஆதிவேந்தன், அதிமுக பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், கணேஷ் பாபு,  தங்கதுரை என்கிற பாபு,  மற்றும் அதிமுக  தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : South Chennai ,constituency ,candidate ,AIADMK ,road ,Jayawardena Street ,
× RELATED தென்சென்னை மக்களவை தொகுதி வாக்கு...